சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கடையம் அருகே பாயச பண்டிகை

கடையம் அருகே மேட்டூர் கிராமத்தில் திங்கள்கிழமை பாயச பண்டிகை கொண்டாடினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:59 am IST

கடையம் அருகே மேட்டூர் கிராமத்தில் திங்கள்கிழமை பாயச பண்டிகை கொண்டாடினர்.
கடையம் அருகே உள்ள மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில், கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முதல் நாள் பாயச பண்டிகை என்ற வழிபாட்டை இளைஞர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மேட்டூர் பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு காலரா போன்ற கொடிய நோய் தாக்கி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து, மேட்டூர் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும் அரிசி, வெல்லம் போன்ற பொருள்களை யாசகம் பெற்று பாயசம் தயாரித்து அனைவருக்கும் வழங்குவதாக நேர்ந்துகொண்டனராம். நோய் குணமானதையடுத்து, வீடுவீடாகச் சென்று பொருள்களை சேகரித்து, இளைஞர்கள் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து பாயசம் தயார் செய்து வழங்கினராம். ஒவ்வொரு ஆண்டும் பாயசம் செய்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நிகழாண்டும் பாயச திருவிழாவை சேகர குரு பண்ணன் சாலமோன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆண்கள் தண்ணீர் சுமந்தும், அனைவரிடமும் பாயச பொருள்கள் யாசகம் பெற்றும் வந்தனர். தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை பாயசம் தயார் செய்து அனைவருக்கும் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.