மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கடையம் அருகே பாயச பண்டிகை

கடையம் அருகே மேட்டூர் கிராமத்தில் திங்கள்கிழமை பாயச பண்டிகை கொண்டாடினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:59 am IST

கடையம் அருகே மேட்டூர் கிராமத்தில் திங்கள்கிழமை பாயச பண்டிகை கொண்டாடினர்.
கடையம் அருகே உள்ள மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில், கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முதல் நாள் பாயச பண்டிகை என்ற வழிபாட்டை இளைஞர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மேட்டூர் பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு காலரா போன்ற கொடிய நோய் தாக்கி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து, மேட்டூர் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும் அரிசி, வெல்லம் போன்ற பொருள்களை யாசகம் பெற்று பாயசம் தயாரித்து அனைவருக்கும் வழங்குவதாக நேர்ந்துகொண்டனராம். நோய் குணமானதையடுத்து, வீடுவீடாகச் சென்று பொருள்களை சேகரித்து, இளைஞர்கள் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து பாயசம் தயார் செய்து வழங்கினராம். ஒவ்வொரு ஆண்டும் பாயசம் செய்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நிகழாண்டும் பாயச திருவிழாவை சேகர குரு பண்ணன் சாலமோன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆண்கள் தண்ணீர் சுமந்தும், அனைவரிடமும் பாயச பொருள்கள் யாசகம் பெற்றும் வந்தனர். தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை பாயசம் தயார் செய்து அனைவருக்கும் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.