திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சிவ.தாமோதரன், பழனியைச் சேர்ந்த ராஜம்மாள் சங்கரன் ஆகியோர் தலைமையில் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது.
இக் கோயில் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள தேரை புதுப்பித்து தேரோட்டம் நடைபெறவும், நீர்வளம் செழித்து உலகநன்மை பெறவும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. சீவலப்பேரி, குப்பக்குறிச்சி, நடுவக்குறிச்சி, கீழநத்தம், கீழப்பாட்டம், திருத்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை சீவலப்பேரி பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

