பாளையங்கோட்டையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் ராஜா (25). இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டாராம்.
திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு 80 வயது!
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
மதுக் கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


