தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம்ஸ்

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 11:48 pm

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் கே.ஹயாத் முகம்மது தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி வரவேற்றார். வழக்குரைஞர்கள் ரமேஷ், பிரிட்டோ, தெ.பீட்டர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பேசியது: நீதிபதியாக மட்டுமன்றி சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த நீதிபதி ராஜேந்திர சச்சார், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மறைந்தார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதே அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறந்த வழியாக இருக்கும் என்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ்.சாகுல் உஸ்மானி, செய்யது அகமது சலபி, மாவட்டச் செயலர் கே.சேக் மஜித், மாவட்டப் பொருளாளர் எல்.சேக் சாலி, அலாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.