நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம்ஸ்

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 11:48 pm

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் கே.ஹயாத் முகம்மது தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி வரவேற்றார். வழக்குரைஞர்கள் ரமேஷ், பிரிட்டோ, தெ.பீட்டர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பேசியது: நீதிபதியாக மட்டுமன்றி சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த நீதிபதி ராஜேந்திர சச்சார், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மறைந்தார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதே அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறந்த வழியாக இருக்கும் என்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ்.சாகுல் உஸ்மானி, செய்யது அகமது சலபி, மாவட்டச் செயலர் கே.சேக் மஜித், மாவட்டப் பொருளாளர் எல்.சேக் சாலி, அலாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.