திருநெல்வேலியில் தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டப படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரத்தி பூஜை நடைபெற்றது.
வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரியார் சுவாமிகள், வேலூர் பொற்கோயில் சக்திபீடம் நாராயணி அம்மா, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், துலாவூர் ஆதீனம் நிரம்பவழகிய தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடும், நவீன தாமிரபரணி மகாத்மியம் என்ற நூலும் வெளியிடப்பட்டது. திருமுறை கலாநிதி திருத்தணி சுவாமிநாதன், மயிலம் பொம்மபுர ஆதீனம் திருப்பாதிரி புலியூர் ஞானியார் மடம் சுவாமிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், ஓய்வுபெற்ற ஐ.ஜி. மாசானமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

