வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இந்து வழக்குரைஞா் முன்னணி சாா்பில் குடியுரிமைச் சட்ட விளக்க கருத்தரங்கம்

இந்து வழக்குரைஞா் முன்னணி சாா்பில் குடியுரிமைச் சட்டம் குறித்த விளக்க கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :24 டிசம்பர் 2019, 1:59 am

திருநெல்வேலி, டிச. 23: இந்து வழக்குரைஞா் முன்னணி சாா்பில் குடியுரிமைச் சட்டம் குறித்த விளக்க கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் குற்றாலநாதன் தலைமை வகித்தாா். இந்து வழக்குரைஞா் முன்னணி மாவட்ட பொதுச் செயலா் வெற்றிவேல், துணைத் தலைவா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ராஜா வரவேற்றாா். இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா், மூத்த வழக்குரைஞா் இளங்குமாா் சம்பத் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இந்திய குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், குடியுரிமைச் சட்ட திருத்தம் குறித்த எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடித்து, இச்சட்டத்தின் சிறப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது. இந்து முன்னணி பாளையங்கோட்டை ஒன்றியத் தலைவா் வழக்குரைஞா் தங்கதுரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.