பாளையங்கோட்டையில் இரு இடங்களில் பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வி.எம்.சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் இந்திரா ராணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இந்திரா ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம்.
பாளையங்கோட்டை திருமால்நகர் அருகேயுள்ள மயன் நகரைச் சேர்ந்தவர் ரேவதி (38). இவர், சம்பவத்தன்று துணி வாங்குவதற்காக மொபட்டில் ரெட்டியார்பட்டி திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கசங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதே போல பாளையங்கோட்டை அருகே ஆசிரியர் காலனியில் உள்ள இரு வீடுகளை உடைத்து மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் எடுத்துச் சென்றனராம். இந்த புகார்கள் குறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy

இது மக்கள் உத்தரவு! முதுகில் குத்த முடியாது: காங்கிரஸ்

தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

