பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்ற நூலை திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.
இது தொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சைவப்பிரகாச சபையின் நிறுவனரான மனோன்மணீயம் சுந்தரனாரின் புதல்வர் பி. எஸ். நடராஜ பிள்ளையின் வாழ்க்கை சரிதை நூல் வெளியீட்டு விழா, திருவனந்தபுரம் கிள்ளிப் பாலத்துக்கு அருகிலுள்ள சைவப்பிரகாச சபையின் சமூக கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு சைவப்பிரகாச சபையின் தலைவர் கே. ரவீந்திரன் தலைமை வ கிக்கிறார். செயலர் எஸ் .டி .அரசு வரவேற்கிறார். மனோன்மணீயம் சுந்தரனாரின் கொள்ளுப் பேரன் எஸ்.மோதிலால் நேரு எழுதியுள்ள பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்கிற நூலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி வெளியிட, கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் வி.பி.மகாதேவன் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்.
கேரள மாநில முன்னாள் அமைச்சர்களான திரு கே. சங்கரநாராயண பிள்ளை, கே.சுரேந்திரன் பிள்ளை, சைவப்பிரகாச சபையின் துணைத் தலைவர் கே.குற்றாலம் , அரவிந்தர் அமைப்பு செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். எம் .எஸ். பத்மநாபன் நன்றி கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

ஜி7 உச்சிமாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டம்!

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


