பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் என்சிசி ஆண்டு பயிற்சி முகாமில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி ஆண்டுப் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம், கமான்டிங் அலுவலர் தினேஷ் நாயர், நிர்வாக அலுவலர் வெற்றி வேலு ஆகியோரின் மேற்பார்வையில் வரும் 29 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்சிசி மாணவர் - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
முகாமில், சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் மாணவர்- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து, தடை தாண்டும் பயிற்சி, ஆயுதங்களை கையாளும் திறன், நிலவியல் வரைபட பயிற்சி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஆகியவை இந்திய ராணுவ வீரர்கள், பள்ளி-கல்லூரி என்சிசி அதிகாரிகள் ஆகியோரால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபேதார் மேஜர் பி.வி. ராஜேஷ் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி

நாக்அவுட் சுற்று நம்பிக்கையில்...
தமிழகம் எதிர்கொள்ளும்!

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக வாக்குவாதம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


