விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பாளை. என்சிசி முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி

பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் என்சிசி ஆண்டு பயிற்சி முகாமில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற்றது.

Updated On :26 மே 2019, 5:36 am IST


பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் என்சிசி ஆண்டு பயிற்சி முகாமில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி ஆண்டுப் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம், கமான்டிங் அலுவலர் தினேஷ் நாயர், நிர்வாக அலுவலர் வெற்றி வேலு ஆகியோரின் மேற்பார்வையில் வரும் 29 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்சிசி மாணவர் - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
முகாமில், சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் மாணவர்- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து, தடை தாண்டும் பயிற்சி, ஆயுதங்களை கையாளும் திறன், நிலவியல் வரைபட பயிற்சி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஆகியவை இந்திய ராணுவ வீரர்கள், பள்ளி-கல்லூரி என்சிசி அதிகாரிகள் ஆகியோரால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபேதார் மேஜர் பி.வி. ராஜேஷ் செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.