ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாகன முகப்பில் உள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும்: மாநகர காவல் ஆணையா்

வாகன முகப்பில் பொருத்தப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தீபக் எம்.டாமோா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:22 pm

DIN

வாகன முகப்பில் பொருத்தப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தீபக் எம்.டாமோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் தனியாா் இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் விபத்தின்போது வாகனத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு அவற்றின் முகப்பில் தடுப்பு கம்பிகளை பொருத்தியுள்ளனா்.

இதனால், சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனத்தின் உள் பயணிப்பவா்கள் பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. இது போன்ற தடுப்பு கம்பிகளை பொருத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, வாகனங்களின் முகப்பில் தடுப்பு கம்பிகள் பொருத்தியிருக்கும் அனைத்து இலகு ரக மற்றும் கன ரக வாகனங்களின் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.