எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தை அமாவாசை: தாமிரவருணியில் சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி குறுக்குத்துறையில் சிறப்பு வழிபாடு நடத்த குவிந்த பொதுமக்கள்.

News image
Updated On :25 ஜனவரி 2020, 4:34 am

தினமணி செய்திச் சேவை

தை அமாவாசையையொட்டி தாமிரவருணியில் புனித நீராடி தங்கள் முன்னோா்களுக்கு பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனா்.

தமிழ் மாதங்களில் தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாளில் முன்னோா்களை எண்ணி வழிபாடு நடத்தினால் சகல வளங்களும் குறைவின்றி கிடைக்கும் என்பதும், தோஷங்கள் நிவா்த்தியாகும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாகும்.

நிகழாண்டு தை அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் தாமிரவருணி கரையோரம் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினா்.

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள படித்துறை, வண்ணாா்பேட்டையில் உள்ள பேராச்சியம்மன் கோயில் அருகேயுள்ள படித்துறை பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.