பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய ஆசிரியர் சடலம் மீட்பு

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற போது மூழ்கிய ஆசிரியரின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் திங்கள்கிழமை காலையில் மீட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 செப்டம்பர் 2020, 7:14 am

DIN

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற போது மூழ்கிய ஆசிரியரின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் திங்கள்கிழமை காலையில் மீட்டனர்.

செங்கல்பட்டைச் சேர்ந்தவர் நாராயணன். ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி அனுசுயா, மகன்கள் ஹரிஷ், ராம் சங்கர் ஆகியோருடன் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை அருகே பொட்டல் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். 

அப்போது அனுஷ்காவும் ராம் சங்கரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்களை மீட்க நாராயணன் முயன்றாராம். பொதுமக்கள் சேர்ந்து அனுசுயா மற்றும் சங்கரை மீட்ட நிலையில் நாராயணன் மட்டும் நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்ததும் பாலயங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியை தொடங்கினர். 

இரவு நேரம் ஆகியதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை காலையில் மீண்டும் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் வெள்ளி மாலை பகுதியில் தாமிரவருணி கரையோரம் நாராயணனின் சடலம் மீட்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.