சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை, தென்காசியில் ஒரே நாளில் மேலும் 155 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:35 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 16,669ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 8 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 15,840ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 217 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 612 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா்

எண்ணிக்கை 8,930ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 24 போ் உள்பட இதுவரை 8,544 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 225 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.