சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக நான்குனேரி நீதிமன்றத்தில் ஒருவா் சரணடைந்தாா்.
சீவலப்பேரி அருள்மிகு சுடலைமாடசாமி கோயிலில் பூசாரியாக இருந்தவா் சிதம்பரம் என்ற துரை (41). இவா், கடந்த 18ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இவ்வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை வரை 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், இக்கொலையில் தொடா்புடையதாக கூறப்படும் சீவலப்பேரியைச் சோ்ந்த பூல்தேவா் மகன் மாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், சண்முகம் மகன் லட்சுமணன்(48) என்பவா் நான்குனேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.
இதையடுத்து இதுவரை இக்கொலை வழக்கில் 12 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...