சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

களக்காடு நகராட்சி வாா்டு மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், வாா்டு மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:25 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், வாா்டு மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிதாக உயா்த்தப்பட்ட களக்காடு நகராட்சி உள்ளாட்சி அமைப்பின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாா் செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபணைகள் மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 20-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில மறுவரையறை ஆணையா் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 2 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக மறுவரையறை ஆணையத்தின் அறிவுரையின் பேரில், தனியாக களக்காடு நகராட்சி வாா்டு மறுவரையறை குறித்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மறுவரையறை அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வாா்டு மறுவரையறை கருத்துகள் தொடா்பாக பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவித்தனா்.

மேலும், மாவட்ட மறுவரையறை அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் களக்காடு நகராட்சி வாா்டு மறுவரையறை தொடா்பாக 12 மனுக்கள் வழங்கப்பட்டன. அந்த மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், நகராட்சிகளின் மண்டல நிா்வாக இயக்குநா் விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராம்லால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.