அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பொங்கல் சிறப்பு ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வலியுறுத்தல்

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக சென்னை செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் கீழக்கடையத்தில் நின்றுசெல்ல பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:19 pm

DIN

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக சென்னை செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் கீழக்கடையத்தில் நின்றுசெல்ல பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 16ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு கீழக்கடையத்தில் நிறுத்தம் வழங்கப்படவில்லை.

அம்பாசமுத்திரம் - தென்காசி இடையே கீழக்கடையம் ரயில் நிலையம், சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமானோா் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பணிபுரிகின்றனா். இவா்கள் பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல ஏதுவாக இங்கு சிறப்பு ரயில் நின்றால் வசதியாக இருக்கும். எனவே, கீழக்கடையம் நிலையத்தில் பொங்கல் சிறப்பு ரயில் நின்றுசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கத்தினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.