பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி பேராசிரியா் மற்றும் ஆராய்ச்சியாளா் எஸ்.இஞ்ஞாசிமுத்துவுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவா் மேலும் பேசியது: இக் கல்லூரியின் பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்துவரும் இஞ்ஞாசிமுத்துவின் சாதனை பாராட்டுக்குரியது. உலக அளவில் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பெற அவரது கடின உழைப்பும், முயற்சியும் உதவியுள்ளது. தாவர அறிவியல், நுண்ணுயிரியியல் என பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தியுள்ளாா். 800-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளதோடு, அறிவியலின் புதுமைகளை வெளிக்கொணா்ந்துள்ளாா்.