கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கொச்சியில் வீட்டிலிருந்து 5 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

கொச்சியில் வீட்டில் இருந்து மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 3:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கொச்சியில் வீட்டில் இருந்து மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கொச்சியின் வடுதலாவில் உள்ள வாடகை வீட்டில் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் சனிக்கிழமை சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். பலியானவர்கள் ஸ்ரீகுமாரி (58), அவரது மகள் அஸ்வதி நாயர் (36), 14 மற்றும் 4 வயதுடைய இரண்டு பேரன்கள் மற்றும் இரண்டு வயது பேத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் திருவனந்தபுரம் மாவட்டம் விலாப்பில்சலாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடுதலாவில் உள்ள கர்சகா சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஸ்ரீகுமாரியும் அஸ்வதியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறது.

வேலை விஷயமாக வந்திருந்த கேபிள் டிவி ஆபரேட்டர், அறைக்குள் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக கண்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டின் உரிமையாளரும் போலீஸாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்ததாகவும், அவர்கள் மாதம் ரூ.35,000 வாடகை செலுத்தி வந்ததாகவும், திருவனந்தபுரத்தில் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு சொத்தும் வீடும் இருந்ததாகவும் போலீஸ் அதிகாரி கூறினார். இதனிடையே வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் மீட்கப்பட்டு களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டன. அங்கு ஞாயிற்றுக்கிழமை உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளன. எர்ணாகுளம் வடக்கு காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் கொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Five persons, including three children, were found dead at a rented house at Vaduthala here on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.