தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
தென்மேற்கு தில்லியில் 'பாலம்' பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் இன்று (மார்ச் 18) காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 30 தீயணைப்புப் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
குடியிருப்புப் பகுதி என்பதால் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். தீயில் இருந்து தப்பிக்க மேல் மாடியில் இருந்து குதித்த இருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ரேகா குப்தா இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
9 Killed Including 3 Children, In Fire At Building In Delhi Palam area
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 9 போ் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



