நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:45 am IST

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்கத்தாவின் தில்ஜலா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டுவந்த தோல் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிற தளங்களுக்கும் தீ பரவி, கரும்புகையுடன் பற்றியெரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையிரும், காவல் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

கட்டடத்தில் சிக்கிய 5 போ், தீயின் கோரப்பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கழிப்பறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனையில் ஏற்கெனவே இருவா் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதல்வா் சுவேந்து அதிகாரியின் உத்தரவின்பேரில், காவல் துறையினா் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அரசின் உத்தரவின்பேரில் 4 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழுவும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.