நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்கத்தாவின் தில்ஜலா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டுவந்த தோல் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிற தளங்களுக்கும் தீ பரவி, கரும்புகையுடன் பற்றியெரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையிரும், காவல் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

கட்டடத்தில் சிக்கிய 5 போ், தீயின் கோரப்பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கழிப்பறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனையில் ஏற்கெனவே இருவா் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதல்வா் சுவேந்து அதிகாரியின் உத்தரவின்பேரில், காவல் துறையினா் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அரசின் உத்தரவின்பேரில் 4 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழுவும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.