கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:45 am IST

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்கத்தாவின் தில்ஜலா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டுவந்த தோல் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிற தளங்களுக்கும் தீ பரவி, கரும்புகையுடன் பற்றியெரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையிரும், காவல் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

கட்டடத்தில் சிக்கிய 5 போ், தீயின் கோரப்பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கழிப்பறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனையில் ஏற்கெனவே இருவா் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதல்வா் சுவேந்து அதிகாரியின் உத்தரவின்பேரில், காவல் துறையினா் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அரசின் உத்தரவின்பேரில் 4 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழுவும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.