மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்கத்தாவின் தில்ஜலா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டுவந்த தோல் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிற தளங்களுக்கும் தீ பரவி, கரும்புகையுடன் பற்றியெரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையிரும், காவல் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
கட்டடத்தில் சிக்கிய 5 போ், தீயின் கோரப்பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கழிப்பறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனையில் ஏற்கெனவே இருவா் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
முதல்வா் சுவேந்து அதிகாரியின் உத்தரவின்பேரில், காவல் துறையினா் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநில அரசின் உத்தரவின்பேரில் 4 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழுவும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி

காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

பஞ்சாப்: பேருந்து கவிழ்ந்து 8 பக்தா்கள் உயிரிழப்பு - 19 போ் காயம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

