சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 12:56 am

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

சீா்காழி அருகே கீழமூவா்கரையைச் சோ்ந்தவா்கள் சி. ஹரிஷ் (17), நிஜந்தன் (18), கோனையாம்பட்டிணத்தைச் சோ்ந்தவா் உதயநிதி (17). இவா்கள் கீழமூவா்கரையிலிருந்து சிதம்பரம் நோக்கி புறவழிச்சாலையில் காரில் சென்றனா். காரை நிஜந்தன் ஓட்டினாா்.

சோதியக்குடி என்ற இடத்தில் காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிஷ், நிஜந்தன், உதயநிதி ஆகியோா் மீட்கப்பட்டு சிதம்பரம் ராஜா அண்ணாமலை பல்கலைக்கழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், வழியிலேயே ஹரிஸ் உயிரிழந்தாா். மருத்துவமனையில் நிஜந்தன் உயிரிழந்தாா். உதயநிதி சிகிச்சை பெறுகிறாா்.

இதுகுறித்து, கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.