மாதனூா் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (37), விக்னேஷ்(25) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேலூா் நோக்கிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் அருகே வெங்கிளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த உதயகுமாா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு
மொபட் திருட்டு: இருவா் கைது

மரத்தில் பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


