மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தின் ந்கோஷே பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் அதிகமான மக்களைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் 3 தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்.
இதனால், பழிதீர்க்கும் நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தக் கடத்தலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், கடந்த மார்ச் 5 முதல் நைஜீரியாவின் கொண்டுங்கா, மார்ட்டே, ஜகானா மற்றும் மைனோக் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மீதும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக, அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக நைஜீரியாவில் போக்கோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
In Nigeria, 300 people, including women and children, were kidnapped by terrorists.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









