கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

ஈரானின் தலைநகர் மீது 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு...

News image

ஈரானின் தலைநகர் மீது 80 இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்....

AP

Updated On :7 மார்ச் 2026, 7:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மீது 80 போர் விமானங்கள் மூலம் புதிய அலையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

தெஹ்ரான் மற்றும் மத்திய ஈரானின் ராணுவத் தளங்கள், முக்கிய கட்டமைப்புகள் மீது புதியதாக 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை (மார்ச் 7) அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்தப் புதிய தாக்குதல்கள் குறித்து ஈரான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் நிபந்தனையின்றி சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.