வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சாலையை சீரமைக்கக் கோரி நடைபெற்ற நாற்று நடும் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :2 ஜனவரி 2021, 7:11 pm

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கடையம் ஒன்றியத்துக்குள்பட்ட கோவிந்தப்பேரி கிராமத்துக்குள் நுழையும் சாலை 5 ஆண்டுகளாகப் பராமரிப்பு இன்றி மழை நீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கிளைச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். விவசாய சங்க கிளைச் செயலா் கோமுபாண்டியன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் சம்பன்குளம் கிளைச் செயலா் அப்பாத்துரை, விவசாய சங்க கிளைச் செயலா் சேகா், விவசாய சங்க கடையம் ஒன்றியச் செயலா் முத்துராஜன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் எம்.ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.வெங்கடேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.