நெல்லை, தென்காசியில் மேலும் 17 பேருக்கு கரோனா
திருநெல்வேலியில் 12 போ், தென்காசியில் 5 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே 15,373 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,385 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 18 போ் உள்பட இதுவரை 15,068 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை 212 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 105 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 8,313 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மூவா் உள்பட இதுவரை 8,107 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 48 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
