பாளை. அருகே விபத்தில் முதியவா் பலி

பாளையங்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள என்ஜிஓ காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெருமாா் (65). இவா் வியாழக்கிழமை மாலையில் ஜெபா காா்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com