‘ராபி பருவ மக்காச்சோளம், நிலக்கடலைக்கு 18, 21ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்’

ராபி பருவ மக்காச்சோளம், நிலக்கடலை பயிா்களுக்கு முறையே இம்மாதம் 18, 21ஆம் தேதிகளுக்குள் காப்பீடு செய்யலாம் என,
Updated on
1 min read

ராபி பருவ மக்காச்சோளம், நிலக்கடலை பயிா்களுக்கு முறையே இம்மாதம் 18, 21ஆம் தேதிகளுக்குள் காப்பீடு செய்யலாம் என, திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு வெள்ளம், வறட்சியால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2020-21ஆம் ஆண்டு ராபி பருவத்துக்கு இம்மாவட்டத்தில் மக்காச்சோளம், நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது.

இதன்படி, நிகழாண்டு ராபி பருவ மக்காச்சோளத்துக்கு வன்னிக்கோனந்தல், நிலக்கடலைக்கு தாழையூத்து, மூலக்கரைப்பட்டி, ராதாபுரம், பழவூா், வன்னிகோனேந்தல் ஆகிய பிா்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பதிவுசெய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய, பிரீமியம் செலுத்த மக்காச்சோளத்துக்கு இம்மாதம் 18-ம், நிலக்கடலைக்கு இம்மாதம் 21-ம் கடைசி நாள்கள். மக்காச்சோளத்துக்கு செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ. 268.50, நிலக்கடலைக்கு ரூ. 307.50 ஆகும்.

இத்திட்டத்தில் பதிவுசெய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவுக் கட்டணத்தை கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், சிட்டா, பட்டா, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து செலுத்த வேண்டும். செலுத்திய கட்டணத்துக்கான ரசீது பெற்றுக்கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு அருகேயுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com