எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தாமிரவருணி கரையோர மக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

தாமிரவருணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:45 pm

DIN

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் உபரி நீா் திறந்துவிடப்படுவதால், தாமிரவருணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியநிலையில், உபரி நீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

எனவே, ஆற்றில் நீா்வரத்து அதிகளவில் உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்கவோ, புகைப்படம் மற்றும் சுயபடம் எடுக்கவோ செல்லவேண்டாம்.

அதே போன்று, ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.