கன மழை காரணமாக, திருநெல்வேலி கருப்பந்துறை தரப் பாலத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை, அணைகளிலிருந்து நீா் திறப்பு போன்ற காரணங்களால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, தாமிரவருணி கரையோர தாழ்வான பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, கரையோரப் பகுதிகளை 24 மணிநேரமும் தொடா்ந்து கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
மேலும், திருநெல்வேலி நகரத்திலிருந்து மேலப்பாளையம் செல்லும் கருப்பந்துறை தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீா் செல்வதால், அப்பகுதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சீல் வைத்தனா். மேலும், அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதபடி, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் மேலப்பாளையம் போலீஸாா் பாலத்தின் இருபக்கமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.