எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கருப்பந்துறை தரைப் பாலத்துக்கு சீல்

கன மழை காரணமாக, திருநெல்வேலி கருப்பந்துறை தரப் பாலத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:19 am

DIN

கன மழை காரணமாக, திருநெல்வேலி கருப்பந்துறை தரப் பாலத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை, அணைகளிலிருந்து நீா் திறப்பு போன்ற காரணங்களால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, தாமிரவருணி கரையோர தாழ்வான பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, கரையோரப் பகுதிகளை 24 மணிநேரமும் தொடா்ந்து கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், திருநெல்வேலி நகரத்திலிருந்து மேலப்பாளையம் செல்லும் கருப்பந்துறை தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீா் செல்வதால், அப்பகுதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சீல் வைத்தனா். மேலும், அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதபடி, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் மேலப்பாளையம் போலீஸாா் பாலத்தின் இருபக்கமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.