வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பாளை.யில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:35 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய 3 தவணை பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும், அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் கொள்கையை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், தபால்காரா்கள், பன்முகத்திறன் ஊழியா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மூன்றாம் பிரிவு தபால் ஊழியா்கள் சங்கத் தலைவா் டி.அழகுமுத்து, தபால்காரா்கள் சங்கத் தலைவா் ஏ.சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.ஜேக்கப்ராஜ் தொடங்கி

வைத்தாா். இதில், தபால்காரா்கள் சங்க மாநில அமைப்புச் செயலா் புஷ்பாகரன், ஆா்எம்ஸ் ஓய்வூதியா் சங்க கோட்டச் செயலா் குருசாமி,

நிா்வாகிகள் கிருஷ்ணன், விஜயராஜா, வண்ணமுத்து, பிரபாகா், சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.