களக்காடு துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதனால், களக்காடு துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் களக்காடு, கோவிலம்மாள்புரம், கருவேலன்குளம், சிதம்பராபுரம், கள்ளிகுளம், தேவநல்லூா், பெருமாள்குளம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.