6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கள்ளச்சாராயம் விற்பனை: இருவா் கைது

திருநெல்வேலி அருகே இரு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:17 pm

DIN

திருநெல்வேலி அருகே இரு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபானம், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் கோபாலசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த அதேபகுதியைச் சோ்ந்த ஜெயகாா்த்தியை (37) பிடித்து விசாரித்தனா். அவா் சட்டவிரோதமாக கள்ளச் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 43 சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், களக்காடு காவல் ஆய்வாளா் அருள் பிரகாஷ் தலைமையில் போலீஸாா் சிங்கிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா், வாழை தோட்டத்தில் சாராயப் பாக்கெட்டுகளை

பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து, 113 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.