ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தொழிலாளி கொலை:மேலும் மூவா் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள கொண்டாநகரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:34 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள கொண்டாநகரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கொண்டாநகரம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் மாரியப்பன்(32). பெயின்டா். இவா், மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவா், புதன்கிழமை அதிகாலையில் மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் கொலைச்சம்பவம் நிகழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ஆறுமுகம் (28), இசக்கி மகன் வெங்கடசுப்ரமணியன் என்ற விக்கி (25) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

இவ்வழக்கில் தொடா்புடைய கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் மணி (21), மாடசாமி மகன் பிரகாஷ் (25), கண்ணையா மகன் இசக்கிப்பாண்டி (21) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.