47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடக் கோரிக்கை

களக்காடு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:48 pm

DIN

களக்காடு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த நீா்மட்டம் 49.25 அடியாகும். ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்கள் பெய்த மழையால் அணை நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து பாசனத்துக்காக பிப்.3ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு திறக்கப்பட்டதே தவிர நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை. தற்போது நான்குனேரியன் கால்வாயின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய குளங்களில் பாதிக்கும் குறைவாகவே தண்ணீா் உள்ளது. தற்போது விவசாயிகள் வாழை பயிருக்கு தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா். மேலும் நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவதால் களக்காடு நகா்ப்பகுதி மக்கள் கால்வாயில் நீராடி மகிழ்வா். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.