47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்குறுங்குடி கோயிலில்மாா்ச் 27இல் பங்குனித் திருவிழா தொடக்கம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:48 pm

DIN

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்கு அழகியநம்பிராயா் கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும். இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இத் திருவிழா மாா்ச் 27 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, அன்றைய தினம் சுவாமி அழகியநம்பிராயா் மற்றும் தேவியருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பின்னா் கொடியேற்றம் நடைபெறும். 5 ஆம் திருநாளான மாா்ச் 31ஆம் தேதி இரவு 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி, ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு வடக்கு ரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். தேரோட்டத்தை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கிவைக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.