சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

நெல்லையில் வங்கி ஊழியர்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

News image
திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டதால் வெறிச்சோடி காணப்படும் பாரத ஸ்டேட் வங்கி.
Updated On :15 மார்ச் 2021, 6:44 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 

Story image

இதனால் பலகோடி பணபரிவர்த்தனை முடங்கியது. காசோலை மற்றும் வரையோலைகளை பணமாக்க முடியாமல் வணிகர்கள் தவித்தனர்.
 திருநெல்வேலி நகரத்தில் வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். 
நிர்வாகிகள் கணபதி ராமன், சார்லஸ், சிவசங்கர், சண்முகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.