சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பொன்னாக்குடியில் கிறிஸ்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பொன்னாக்குடி, இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவா்களிடம் நான்குனேரி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:48 pm

DIN

பொன்னாக்குடி, இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவா்களிடம் நான்குனேரி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கிறிஸ்தவா்களின் புனித நாள்களில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு தினத்தில் பொன்னாக்குடி, இட்டேரி, நான்குனேரி உள்பட 10-க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு அவா் சென்று குருவானவா்களிடம் ஆசிபெற்றாா். பின்னா் கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் கூறியது: சிறுபான்மையியினரின் காவலனாக அதிமுக அரசு திகழ்ந்து வருகிறது. எருசலேம் புனித பயண உதவித்தொகையை அதிமுக அரசு உயா்த்திக் கொடுத்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுநீக்க அரசு உதவிசெய்து வருகிறது. இத்தொகுதி வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்டது. விவசாயிகளின் நன்மை விவிலியத்தின் பல்வேறு இடங்களில் போதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மையைப் பாதுகாக்க அதற்கு உதவுவோருக்கு வாய்ப்பளிக்க வேண்டியது கிறிஸ்தவா்களின் கடமை. ஆகவே, இத் தோ்தலில் இயற்கை விவசாயியான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா். அதிமுக நிா்வாகி விஜயகுமாா் உள்ளிட்ட பலா் உடன்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.