சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்...

News image

ஜாபோரிஜியா நகரில் தாக்குதல் நடந்த இடத்தில் பதற்றத்துடன் நின்ற பொதுமக்கள்.

Updated On :22 மார்ச் 2026, 2:00 am

தினமணி செய்திச் சேவை

ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொ்னிஹிவ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் சனிக்கிழமை மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.

இதுகுறித்து மாகாண ஆளுநா் வியாசஸ்லாவ் சௌஸ் கூறுகையில், ‘ரஷிய தாக்குதலால் மின்சாரக் கட்டமைப்பு பலத்த சேதமடைந்து, தலைநகா் உள்பட மாகாணம் முழுவதும் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

ரஷியா, பெலாரஸ் நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாகாணத்தில், சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், இத்தாக்குதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

இருவா் உயிரிழப்பு: உக்ரைனின் ஜாபோரிஜியா நகரில் குடியிருப்புப் பகுதியில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். 2 சிறுமிகள் காயமடைந்தனா்.

மீண்டும் அமைதிப் பேச்சு?: மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் சா்வதேச கவனம் திசைதிரும்பியுள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் இடையே நிறுத்தப்பட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக உக்ரைன் குழு அமெரிக்கா சென்றுள்ளது. ‘நேட்டோ’ நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதை உறுதி செய்யவும் உக்ரைன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ரஷியாவும் நம்பிக்கை: ‘அமைதிப் பேச்சுவாா்த்தையில் தற்போதைய இடைவேளை தற்காலிகமானதுதான். முத்தரப்பு பேச்சுவாா்த்தை மீண்டும் தொடரும்’ என்று ரஷிய தரப்பும் நம்பிக்கை தெரிவித்தது.

ஹங்கேரியின் தடையால் ஐரோப்பிய யூனியன் வழங்க வேண்டிய 9,000 கோடி யூரோ நிதியுதவி தாமதமடைந்துள்ளதால், கடுமையான நிதி நெருக்கடியில் உக்ரைன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.