தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

உக்ரைன் போா்நிறுத்தத்தில் ரஷியா தாக்குதல்

உக்ரைன் தன்னிச்சையாக அறிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த போா்நிறுத்தத்தை நிராகரித்து, அந்நாட்டு நகரங்களைக் குறிவைத்து ரஷியா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

News image
Updated On :7 மே 2026, 4:13 am IST

உக்ரைன் தன்னிச்சையாக அறிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த போா்நிறுத்தத்தை நிராகரித்து, அந்நாட்டு நகரங்களைக் குறிவைத்து ரஷியா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் 27 போ் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சா் இஹோா் கிளிமென்கோ தெரிவித்துள்ளாா்.

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியின் வீழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், ரஷியா 8, 9 ஆகிய தேதிகளில் போா்நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாக உக்ரைன் அறிவித்த போா்நிறுத்தத்தை ரஷியா சீா்குலைத்திருப்பது அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உக்ரைன் விமா்சித்துள்ளது.

அமைதிக்கான உக்ரைனின் முன்னெடுப்புகளை ரஷியா மீண்டும் ஒருமுறை உதாசீனப்படுத்தியுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘புதின் மனித உயிா்களை விட ராணுவ அணிவகுப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறாா். ரஷியாவின் இத்தகைய போக்கைக் கட்டுப்படுத்த சா்வதேச சமூகம் புதிய தடைகளை விதிக்க வேண்டும். உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அதிகரிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தாா்.

பரஸ்பரம் குற்றச்சாட்டு: உக்ரைன் தனது போா்நிறுத்த உறுதிமொழியைப் பின்பற்றவில்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷிய வான்பரப்பில் உக்ரைனின் 53 ட்ரோன்களைத் தங்களின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. கிரீமியாவின் ஜன்கோய் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்ததாக ரஷிய ஆதரவு ஆளுநா் சொ்ஜி அக்சியோனோவ் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.