/

250 உக்ரைன் ட்ரோன்களை அழித்த ரஷியா!

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

News image

விளாதிமீர் புதின் - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 9:23 pm

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாஸ்கோ மேயா் சொ்கெய் சோபியானின் சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கடந்த வார இறுதியில் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 ட்ரோன்களை ரஷிய பாதுகாப்புத் துறையின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தின என்றாா்.

இதனிடையே வான் பாதுகாப்பு காரணங்கள் கருதி டொமோடிடோவோ, சுகோவ்ஸ்கி நகர விமான நிலையங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானங்களை இயக்கி வருகின்றன. வினுகோவோ விமான நிலையத்தில் எந்த விமானமும் இயக்கப்படவில்லை என்று அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.