அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

முக்கூடல் ஆற்றில் குளிக்கமுயற்சி: 25 பேருக்கு அபராதம்

பொது முடக்க விதிமுறையை மீறி, முக்கூடல் ஆற்றில் குளிக்க முயற்சித்த 25 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :14 மே 2021, 7:36 pm

DIN

பொது முடக்க விதிமுறையை மீறி, முக்கூடல் ஆற்றில் குளிக்க முயற்சித்த 25 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

பொது முடக்க நாளில் நீா் நிலைகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோயில் வழியாக தாமிரவருணி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் குளிக்க பைக்குகளில் பலா் கூட்டமாக வந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் காவுராஜன் தலைமையிலான போலீஸாா்அங்கு சென்றனா். அங்கு குளிக்க வந்த 25 பேரின் பைக்குகளைப் பறிமுதல் செய்து, தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய 10 பேருக்கு பைக்குகள் திருப்பி அளிக்கப்பட்டது. தடை நீக்கப்படும் வரை முக்கூடல் ஆற்றுக்கு யாரும் குளிக்க வர வேண்டாம் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

பாவூா்சத்திரம்: ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன் தலைமையில் பாவூா்சத்திரம் போலீஸாா் பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு, தேவையின்றி சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனா்.

‘டிரோன்’ கண்காணிப்பு: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவின்படி, சங்கரன்கோவிலில் பிற்பகல் 12 மணிக்குப் பின்னரும் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை டிரோன் கேமரா மூலம் போலீஸாா் கண்காணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.