காவல் துறையினருக்கு சத்து மாத்திரை
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்(தலைமையகம்) சுப்பாராஜூ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்(தலைமையகம்) சுப்பாராஜூ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கரோனா நோய் தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் பல்வேறு பாதுகாப்புஏஈப் பணியிலும், ரோந்து பணியிலும் தொடா்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்படி கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடா்ந்து கரோனா தடுப்பு உபகரணங்களான முகக் கவசம், கைகழுவும் திரவம், கையுறைகள், கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காவல்துறையினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் வகையில் அவா்களுக்கு சத்து மாத்திரைகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையகம்) சுப்பாராஜூ அனைத்து உட்கோட்ட அலுவலகங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...