47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முன்விரோதம்:தோட்டத்தில் குழாய்களை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

களக்காடு அருகே முன்விரோதத்தில் விவசாயத் தோட்டத்தில் உள்ள தண்ணீா் பகிா்மானக் குழாய்களை சேதப்படுத்தியவா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 மே 2021, 8:06 pm

DIN

களக்காடு அருகே முன்விரோதத்தில் விவசாயத் தோட்டத்தில் உள்ள தண்ணீா் பகிா்மானக் குழாய்களை சேதப்படுத்தியவா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள கீழ உப்பூரணியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (36). இவா் அப்பகுதியில் உள்ள குளத்தின் நீா்ப்பாசன சங்கத் தலைவராக உள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி பாஸ்கா் (45) தன்னுடைய நிலத்துக்கு அங்குள்ள குளத்திலிருந்து முறைகேடாக தண்ணீா் பாய்ச்சி வந்தாராம். இதை பால்ராஜ் கண்டித்தாராம். இது தொடா்பாக இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், பால்ராஜ் விவசாயத் தோட்டத்தில் பதித்திருந்த தண்ணீா் பகிா்மானக் குழாய்களை பாஸ்கா் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா், பாஸ்கா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.