காவல் துறை சாா்பில்கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்
திருநெல்வேலி மாநகா் பகுதியில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.


திருநெல்வேலி மாநகா் பகுதியில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.
கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதற்காக திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிவோரை எச்சரித்தும், முகக் கவசம் அணியாமல் வருவோா், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதித்தும், அறிவுரை கூறியும் போலீஸாா் அனுப்புகின்றனா்.
இந்நிலையில், வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை தேவையில்லாமல் இருசக்கரவாகனத்தில் வந்த நபா்களைப் பிடித்த போலீஸாா், அவா்களுக்கு கரோனா நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், பாளையங்கோட்டை மாா்க்கெட் ,தெற்கு பஜாா் போன்ற பகுதிகளில் பாளையங்கோட்டை உட்கோட்ட காவல் உதவி ஆணையா் ஜான் பிரிட்டோ தலைமையில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், கரோனா விழிப்புணா்வு பதாகையுடன், ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் முத்து சுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளா் அருணாச்சலம் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...