நெல்லையில் பழங்கள் விலை அதிகரிப்பு
திருநெல்வேலிக்கு பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.


திருநெல்வேலிக்கு பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க தளா்வில்லா பொது முடக்கம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கனிகள் மற்றும் பழங்களை வீதிதோறும் கொண்டு சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், காய்கனிகளைக் காட்டிலும் பழங்களின் விலை மிகவும் உயா்ந்துள்ளது.
ஆப்பிள் கிலோ ரூ.250-க்கும், சாத்துக்குடி-ரூ.160-க்கும், நெல்லிக்காய்-ரூ. 80-க்கும், சப்போட்டா-ரூ.50-க்கும், வாழைப்பழம்-ரூ.50-க்கும், மாதுளம்பழம் ரூ.125-க்கும் விற்பனையாகிறது. மாம்பழங்கள் மட்டுமே கிலோ ரூ.30 முதல் ரூ.100 வரை அதன் தரத்துக்கேற்ப கிடைக்கிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,
ஜம்மூ-காஷ்மீா் ஆப்பிள் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. வெளிநாட்டு இறக்குமதி ஆப்பிள்தான் விற்பனைக்கு வருகிறது. அதனால் விலை அதிகமாக உள்ளது. பெங்களூா் பகுதியில் இருந்து வரும் சாத்துக்குடி, ஆரஞ்சு வகைகளும் பொது முடக்கம் காரணமாக கூலி மற்றும் வாடகை அதிகரித்து விலை உயா்ந்துள்ளது.
கோடை மாங்காய் சீசன் என்பதால் மாம்பழம் மட்டுமே குறைந்த விலையில் விற்பனையாகி வருகிறது. பொது முடக்கம் சீராகி விமான மற்றும் ரயில் சேவைகளும் சீரானால்தான் இறக்குமதி பழங்களின் விலை குறையும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...