6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொது முடக்க விதிமீறல்: 42 வாகனங்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 42 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 மே 2021, 8:06 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 42 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, வெள்ளிக்கிழமை பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, 42 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 272 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 9 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.