பொது முடக்க விதிமீறல்: 42 வாகனங்கள் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 42 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 42 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, வெள்ளிக்கிழமை பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, 42 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 272 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 9 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...