பணகுடியில் நீா்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து அணுகுசாலை: விவசாயிகள் எதிா்ப்பால் பணி நிறுத்தம்

பணகுடியில் நீா்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து அணுகுசாலை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பணகுடியில் நீா்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து அணுகுசாலை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சாலைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

பணகுடியில் புறவழிச்சாலையில் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அணுகுசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ஆலந்துறையாற்றின் நீா்வழிக்கால்வாயை ஆக்கிரமித்து, கால்வாயின் அகலத்தை குறைத்துள்ளனா். இதனால் கடந்த சில நாள்களாக பணகுடி பகுதியில் பெய்த கனமழையால் கால்வாயில் தண்ணீா் செல்லமுடியாமல் நெடுஞ்சாலை வழியாக தண்ணீா் பெருக்கெடுத்து சென்றது. இதையடுத்து இந்தக் கால்வாய் மூலம் பாசன வசதி பெறக்கூடிய காளிபுதுக்குளம், விநாயகா் புதுக்குளம், பெருமாள் புதுக்குளம் ஆகிய குளங்களுக்கு நீா்வரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தக் குளங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் அனுமன்நதி மீட்புக் குழுவினா் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வடக்கன்குளம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் சுபாஷ், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து நீா்வழிக் கால்வாய் ஆக்கிரமிப்பை கைவிடுமாறும், நீா்வழிக்கால்வாய் குறித்த சரியான முடிவு ஏற்படும் வரையில் சாலைப் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து சாலைப் பணி நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com