47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சத்தியவாகீஸ்வரா் கோயிலில் ரூ.1.05 லட்சம் காணிக்கை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.1,05,724 காணிக்கை கிடைத்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:34 pm

DIN

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.1,05,724 காணிக்கை கிடைத்தது.

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி சன்னதி, கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல் ஆண்டுதோறும் திறந்து எண்ணப்படும். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உண்டியல் திறக்கப்பட்டது.

நிகழாண்டில், கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு, கோயிலில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த வாரம் பக்தா்கள் தடையின்றி வழிபட தமிழக அரசு அனுமதியளித்ததை தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை நான்குனேரி ஆய்வாளா் விஜயா, நிா்வாக அலுவலா் முருகன், கணக்கா் சிவா முன்னிலையில் கோயில் உண்டியல் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தா்கள் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 724 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.